Saturday 8 October 2016

விழாக்கால முன்பணமும் விழிபிதுங்கும் நமது ஊழியர்களும்.

நமது ஊழியர்கள் விழாக்களுக்கு பெற்றுவந்த விழாக்கால முன்பணம் நமது மாநிலத்தில்  ERP ESS முறை அமுல்படுத்தப்பட்ட உடன் முறைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டு குறிப்பிட்ட தேதியில் ஊழியர்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட தேதியில் பணம் பட்டு வாடா செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது அதன் அடிப்படையில் ஊழியர்கள் தசரா, மொஹரம் மற்றும் தீபாவளி ஆகிய மூன்று பண்டிகைகளுக்கும் 03/10/2016ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 06/10/2016ம் தேதிக்குள் பணம் பட்டுவாடா செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும்  எனவும் CGM அலுவலக உத்தரவு இருந்தும் முறைப்படி 03/10/2016க்கு முன் விண்ணப்பித்த ஊழியர்களுக்கு இதுவரை பணப்பட்டுவாடா செய்யப்படவில்லை விழாக்கள் முடிந்தவுடன்தான் விழாக்கால முன்பணம் வருமா? 

குறிப்பிட்ட காலத்திற்குள் ஊழியர்கள் விண்ணப்பிக்காவிடில் CGM அலுவலக உத்தரவின்படி  மனுக்கள் பரிசீலிக்கப்படாது எனக்கூரி மனுக்களை தள்ளுபடிசெய்யும்  அதிகாரிகள் CGM அலுவலக உத்தரவின்படி குறிப்பிட்ட காலத்தில் (விழாக்கள் முடியும் முன்) ஊழியர்களுக்கு விழாக்கால முன் பணம் வழங்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நமது மாவட்ட சங்கம் வலியுறுத்துகிறது. 

No comments:

Post a Comment