Monday 8 May 2023

 


மாற்றலில் இருந்து விலக்கு அளிக்கும் சலுகையை மறுப்பதற்கு எதிராக, 11.05.2023 அன்று ஆர்ப்பட்டம் நடத்துவதற்கான அறிவிப்பை, BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு வழங்கியது.

மாற்றலில் இருந்து விலக்கு அளிக்கும் சலுகை மறுக்கப்படுவதற்கு எதிராக, 11.05.2023 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த, BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையம், ஏற்கனவே அறைகூவல் விடுத்திருந்தது.

BSNL ஊழியர் சங்கத்திற்கு 33 மாநில சங்கங்கள் உள்ளன. கார்ப்பரேட் அலுவலக உத்தரவின் படி, ஒவ்வொரு மாநிலத்திலும், 3 நிர்வாகிகள், மாற்றலில் இருந்து விலக்கு என்கிற வசதியை பெற தகுதியானவர்கள். ஆனால், இந்த 33 மாநிலங்களிலும், ஒரு நிர்வாகி கூட இந்த சலுகையை அனுபவிக்கவில்லை.

அதே போல, நாடு முழுவதும், BSNL ஊழியர் சங்கத்திற்கு 372 மாவட்ட சங்கங்கள் உள்ளன. கார்ப்பரேட் அலுவலக உத்தரவின் படி, ஒவ்வொரு மாவட்டத்திலும், 3 நிர்வாகிகளுக்கு இந்த மாற்றலில் இருந்து விலக்கு அளிக்கும், சலுகையை பயன்படுத்த முடியும். ஆனால், வதோதரா, ஸ்ரீகாகுளம் மற்றும் கடப்பா ஆகிய மூன்று மாவட்ட செயலாளர்கள் மட்டும், இந்த சலுகையை பயன்படுத்தி உள்ளனர்.

தற்போது, இந்த வசதியை முழுமையாக நீக்குவதற்கு, BSNL நிர்வாகம் விரும்புகிறது போலும். குஜராத் மாநிலம், வதோதரா மாவட்ட செயலாளர் தோழர் ஆனந்த் நாராயண் சிங் அவர்களுக்கு போடப்பட்டுள்ள, மாற்றல் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, 11.05.2023 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான அறிவிப்பை, BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு இன்று வழங்கியுள்ளது. இந்த பிரச்சனை, சுமுகமாக தீர்வு காணப்படவில்லை எனில், BSNL ஊழியர் சங்கம், நிச்சயமாக தனது போராட்டத்தை தீவிரப்படுத்தும்.

 

No comments:

Post a Comment