Monday 17 October 2016

தேவையில்லை துணை டவர் நிறுவனம்.
நஷ்டம் நஷ்டம் என்கின்ற கஷ்டம் மாறி நமது BSNL நிறுவனம் புது புது தனியார் நிறுவனங்கள் வந்து  மக்களை பலூனில் பறக்க விடுவது போல் விளம்பரம் செய்தாலும் நமது BSNL நிறுவனம் தான் மக்கள் நிறுவனம் என்று பறை சாற்றி மக்களின் ஆதரவோடும், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கடும் உழைப்பாலும் நமது BSNL நிறுவனம் லாபகரமாக மாறிக்கொண்டுவரும் போது நமது நிறுவனத்தை  துணை டவர் நிறுவனம் என்று கூறி கூறுபோட நினைக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து 14/10/2016 அன்று கூடிய FORUM CORE COMMITTEEயின் கூட்டம் முதற்கட்ட போராட்டமாக 26/10/2016 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அரை கூவல் விடுத்துள்ளது. நாம் போராடி பெற்ற சலுகைகள் பலவற்றை தியாகம் செய்து காத்த நமது BSNL நிறுவனத்தை கூறுபோட்டு துணை டவர் நிறுவனம் அமைக்க ஒருபோதும் அனுமதியோம் என்று இந்த அரசிற்கு உணர்த்துவோம். 
"இன்குலாப் ஜிந்தாபாத்"
நீலகிரி மாவட்ட சங்கம்.

No comments:

Post a Comment