பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதி மன்றங்களின் உன்னதமான தீர்ப்பு
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதி மன்றங்கள் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளது. நமது ஊழியர்கள் காசாக்கும் (EL) விடுப்பை அதிகபட்சமாக 300நாட்கள் மட்டுமே வைத்துக்கொள்ளமுடியும் என்றும் 300நாட்களுக்கு மேல் தங்களின் கணக்கில் சேர்த்து வைத்துக்கொள்ள முடியாது எனவும் அப்படி இருந்தால் அந்த விடுப்புகள் தானே கழிந்து (LAPSE) விடும் எனவும் கூறி கழிக்கப்பட்டது ஆனால் அது தவறு எனவும் ஒரு ஊழியர் தனது காசாக்கும் விடுப்பை எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் (300நாட்களுக்கு மேல்) தங்கள் கணக்கில் சேர்த்து வைத்து கொள்ளலாம் எனவும் அவ்விடுப்புகள் தானே கழியாது எனவும் அவ்வூழியர் சட்டத்தில் உள்ளது போல் அதிகபட்சம் 300நாட்கள் விடுப்பை மட்டும் காசாக்கி கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது ஆகவே ஒவொரு வருடமும் நமது விடுப்பு தானே கழிந்து விடும் (LAPSE) என்றும் கட்டாயம் நாம் அந்த விடுப்புகளை எடுக்கவேண்டும் என்கிற நிலையில் இருந்து மீண்டு நமது கணக்கில் வைத்துக்கொண்டு நமக்கு தேவை படும் போது அந்த விடுப்புகளை எடுத்துக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment