மத்திய சங்க செய்திகள் ...
2014-2015ம் ஆண்டிற்கான PLI குறித்த கார்ப்ரேட் உத்தரவு வெளியாகி
10 நாட்களுக்கு மேலாகியும் அதற்கான நிதி இதுவரை மாநிலங்களுக்கு வழங்கப்படவில்லை இதுகுறித்து நமது பொதுச்செயலர் GM(T&BFCI) அவர்களை அணுகியபோது நிதி வழங்குவது குறித்து அவரால் சரிவர கூறமுடியாத காரணத்தால் இவ்விஷயத்தில் மேலும் காலதாமதம் ஏற்படக்கூடாது என்பதால் நமது CMD BSNL அவர்களை உடனடியாக தலையிட்டு மாநிலங்களுக்கு நிதி வழங்க தக்க நடவடிக்கை எடுத்து காலதாமதத்தை தவிர்க்கும் படிக்கும் நமது பொதுச்செயலர் கடிதம் எழுதியுள்ளார்.
நமது NE ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூபாய் 200/-க்கான SIMகார்டில் ஊழியர்கள் நமது சேவையை மேம்படுத்த வசதியாக நமது சங்கம் எடுத்த முயற்சியின் விளைவால் ரூபாய் 200/-ல் ரூபாய் 50/-க்கு பிற செல் பேசி நிறுவனங்களுக்கும் அழைத்துக்கொள்ளும் சலுகை இந்தமாதம் நிறுத்தப்பட்டது இது தவறு என நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியது ஆனால் கார்ப்ரேட் நிர்வாகம் இது குறித்து மாநில நிர்வாகங்களிடம் தேவையற்ற தகவல்களை கேட்டு காலதாமதம் செய்து வருகிறது இது குறித்து நமது பொது செயலரும்,உதவி பொதுச்செயலாரும் நமது இயக்குனர் மனித வளம் அவர்களை சந்தித்து இச்சலுகை தொடர வற்புறுத்தினர் அவரும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து நாம் 26/10/2016 அன்று நடக்கவிருந்த முதற்கட்ட போராட்டமான ஆர்ப்பாட்டம் 27/10/2016 அன்று ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது அனைத்து தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து BSNLநிறுவனம் காக்கும் போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்.
நீலகிரிமாவட்ட சங்கம்.
No comments:
Post a Comment