Saturday 22 October 2016

மத்தய சங்க செய்திகள்... 
ரூபாய் 3050 கோடி அபராதம் 

நமது பாரத பிரதமர் அவர்கள் உட்பட ஒட்டுமொத்த அரசு எந்திரமும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ  நிறுவனத்திற்கு ஆதரவாக செயல் படுவதை நிரூபித்தது தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நமது நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்களான ஏர்டெல்,ஓடா போன் மற்றும் ஐடியா நிறுவனங்கள்   முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ  நிறுவனத்திற்கு தேவையான அளவிற்கு உட்புற இணைப்புகள் வழங்காததால் அதற்க்கு அபராதமாக ரூபாய் 3050 கோடி ரூபாய் செலுத்தவேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் மேற்காண் தொலை தொடர்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கூறியுள்ளது. கடந்த காலங்களில் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் விதிமீறலால் அரசு துறை நிறுவனமான BSNL நிறுவனம் மாபெரும் நஷடத்தை சந்தித்த போது அமைதிகாத்த  தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்காக ஆர்ப்பரிப்பது நமக்கு ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.

No comments:

Post a Comment