Wednesday 16 November 2016

நமது BSNL நிறுவனத்தை அழிக்க நினைக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து தர்ணா மற்றும் ஒரு நாள் வேலை நிறுத்தம்..!

நமது BSNL நிறுவனத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து இன்று தலை நகர் டெல்லியில் கூடி மத்தியில் ஆளும் BJP அரசாங்கத்தின் தவறான நமது நிறுவனத்தை சீர்குலைக்கும் போக்கான துணை டவர் நிறுவனம் அமைப்போம் எனும் போக்கிற்கு எதிராக வருகிற 25/11/2016 அன்று சக்தி மிகு ஒரு நாள் தர்ணா போராட்டம் நடத்துவது எனவும் அரசு தனது தவறான போக்கை கைவிடாத பட்சத்தில் 15/12/2016 அன்று ஒரு நாள் நாடு தழுவிய மாபெரும் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கும் அரை கூவல் விடுத்துள்ளன.மாநில மற்றும் மாவட்ட சங்கங்கள் அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து    மாபெரும் சக்தி மிகு போராட்டமாக இப்போராட்டங்களை நடத்திடுமாறு மத்திய சங்கங்களால்  அறைகூவல் விடப்பட்டுள்ளது.

நாங்கள் கட்டி காத்த எங்களது, இந்திய நாட்டின் மக்களது நிறுவனமான BSNL நிறுவனத்தை யாரும் கூறுபோட அனுமதியோம் தயாராவோம் தோழர்களே போராட்ட கலத்திற்கு கோடிக்கால் பூதமாக!
நீலகிரி மாவட்ட சங்கம் 

No comments:

Post a Comment